Thursday, June 9, 2016

தவமின்றி கிடைத்த வரமே....🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

நான் கவிதை.!

நீ கவிஞன்.!

முற்றுப்புள்ளியில் முடிகிறது

முத்தம்.....!!


🌸

எதிர்பாரா தருணத்தில்

நீ தரும் முத்தத்தை

எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.!!!


🌸

தவம் என்பது ?

நீ வர காத்திருப்பது.

வரம் என்பது ?

நீ வர பார்த்திருப்பது !!


🌸

நாத்திகவாதி கோவிலுக்கு வெளியிலே நின்று விட்டான்..

நான் கடவுளிடம் பிராத்தித்துக்கொண்டிருக்கிறேன்..

என் காலணியை காவல் காத்துக்கொண்டிருக்கிறது காதல்தெய்வம்.!!


🌸

என்றைக்குமானது இன்றைய பிராத்தனை.

இன்றைய பிராத்தனை,

இம்மையும், மறுமையும்

உன் அண்மையிலிருப்பது..!!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment