🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
நான் கவிதை.!
நீ கவிஞன்.!
முற்றுப்புள்ளியில் முடிகிறது
முத்தம்.....!!
🌸
எதிர்பாரா தருணத்தில்
நீ தரும் முத்தத்தை
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.!!!
🌸
தவம் என்பது ?
நீ வர காத்திருப்பது.
வரம் என்பது ?
நீ வர பார்த்திருப்பது !!
🌸
நாத்திகவாதி கோவிலுக்கு வெளியிலே நின்று விட்டான்..
நான் கடவுளிடம் பிராத்தித்துக்கொண்டிருக்கிறேன்..
என் காலணியை காவல் காத்துக்கொண்டிருக்கிறது காதல்தெய்வம்.!!
🌸
என்றைக்குமானது இன்றைய பிராத்தனை.
இன்றைய பிராத்தனை,
இம்மையும், மறுமையும்
உன் அண்மையிலிருப்பது..!!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
No comments:
Post a Comment