Friday, June 10, 2016

🔘🔘🔘 குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா




🔘🔘🔘
சந்திர வதனம் ஒற்றைக் கொங்கை

சூரியப்பிரிகை வளைய வானவில்

நிசி மிளிர் விண்மீன் திரள்

பனி மழை வெய்யில்

வெக்கை இரவு, பசிய பகல்

நாம் சேர்ந்து ஒரு நாள்.


🔘🔘🔘
தன் பைத்தியத்தை

தன் கிரணத்தால்

தண் அலைகளுக்குத்

தன் பேய்ப் பிடிக்கச்செய்யும்

தண் நிலா தான் நீ.

தண் கடல் தான்  நான்..!



🔘🔘🔘
சலனக் கடலில்

சலனமற்று

சயனித்திருக்கிறாய்.


சயனமற்று

சலனித்திருக்கிறேன்

சலன இரவில்.!

No comments:

Post a Comment