💡
பூட்டிய கதவைத் தட்டி நிற்கிறேன்,
கதவைத் திற, காதல் வரட்டும்.!
💡
ஒரு தேனீர் வாங்கி,
இருவரும் அருந்தும் போது,
தம்ளரின் எல்லா விளிம்புகளையும்
ஈரம் செய்பவன் நீ..
💡
கொசுவைத் தவிர யாருமில்லை,
இரவெல்லாம் பேசலாம் வா.!
💡
ஒற்றை கூல்ட்ரிங்ஸில்,
இரட்டை ஸ்ட்ரா இட்டு,
இருவரும் பருகும்போது,
உன் வழியாக உறிஞ்சி எடுக்கிறாய்
என்னை.!
💡
பிறந்தநாள் மெழுகுவர்த்தியாய்
ஊதி அணை என்னை.!
💡
மாலைதீரப் பேசியபின்னும்,
அப்புறம் என்ன? என்கிறாய்.
எப்புறமும் யாருமில்லை
அப்புறமென்ன அப்புறம்.?!
💡
இரு இரு இரு..
நிலா நம்மைப் பார்க்கிறது.!
💡
உன் அசுர மொக்கைகளை
பொறுத்துக்கொள்ள முடியாதபோது,
இந்த பெட்டர்மாட்ஸ் லைட்டே தான் வேணுமா.?
என,
எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்.!
💡
நீ என் இமய வரம்பன்.! 😉
No comments:
Post a Comment