Friday, June 10, 2016

💡 பொன் மாலைப் பொழுது 💡



💡
பூட்டிய கதவைத் தட்டி நிற்கிறேன்,

கதவைத் திற, காதல் வரட்டும்.!


💡
ஒரு தேனீர் வாங்கி,
இருவரும் அருந்தும் போது,
தம்ளரின் எல்லா விளிம்புகளையும்
ஈரம் செய்பவன் நீ..

💡
கொசுவைத் தவிர யாருமில்லை,

இரவெல்லாம் பேசலாம் வா.!

💡
ஒற்றை கூல்ட்ரிங்ஸில்,
இரட்டை ஸ்ட்ரா இட்டு,
இருவரும் பருகும்போது,
உன் வழியாக உறிஞ்சி எடுக்கிறாய்
என்னை.!

💡
பிறந்தநாள் மெழுகுவர்த்தியாய்
ஊதி அணை என்னை.!

💡
மாலைதீரப் பேசியபின்னும்,

அப்புறம் என்ன? என்கிறாய்.

எப்புறமும் யாருமில்லை

அப்புறமென்ன அப்புறம்.?!


💡
இரு இரு இரு..

நிலா நம்மைப் பார்க்கிறது.!

💡
உன் அசுர மொக்கைகளை
பொறுத்துக்கொள்ள முடியாதபோது,
இந்த பெட்டர்மாட்ஸ் லைட்டே தான் வேணுமா.?

என,

எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்.!

💡
நீ என் இமய வரம்பன்.! 😉

No comments:

Post a Comment