❤
நான் மட்டும் நீயாய் இருந்தால்
என்னை இத்தனை தூரம்
ஏங்கவிட்டிருக்க மாட்டேன்.
❤
வியர்வையாய் ஊறிக்கொண்டிருக்கிறாய்.
முந்தானையால் துடைத்துக் கொண்டிருக்கிறேன்.!
❤
தோற்பது போலத் தோன்றினால்,
ஆட்டத்தைக் கலைத்துவிட்டு
ஆரம்பத்திலிருந்துத் துவங்குகிறான்
எல்லா விளையாட்டுகளையும்.!
❤
குளியலைறையின் சோப்புவாசமாக,
நிரந்தரமாகத் தங்கிவிட்டாய்.
விபத்தில் இறந்தால்
கடைசி ஓர்மைகள்
உன்னதாக இருக்கும்.!
❤
ஹாஸ்யக் கதைசொல்லி சிரிக்கவைத்தால்,
கமலஹாஸ்யக் கதைசொல்லி காதலேற்றுகிறாய்
சகலகலா வல்லவனே.!
No comments:
Post a Comment