Thursday, June 9, 2016

❤ சண்டியர் ❤






நான் மட்டும் நீயாய் இருந்தால்
என்னை இத்தனை தூரம்
ஏங்கவிட்டிருக்க மாட்டேன்.



வியர்வையாய் ஊறிக்கொண்டிருக்கிறாய்.
முந்தானையால் துடைத்துக் கொண்டிருக்கிறேன்.!



தோற்பது போலத் தோன்றினால்,
ஆட்டத்தைக் கலைத்துவிட்டு
ஆரம்பத்திலிருந்துத் துவங்குகிறான்
எல்லா விளையாட்டுகளையும்.!



குளியலைறையின் சோப்புவாசமாக,
நிரந்தரமாகத் தங்கிவிட்டாய்.

விபத்தில் இறந்தால்
கடைசி ஓர்மைகள்
உன்னதாக இருக்கும்.!



ஹாஸ்யக் கதைசொல்லி சிரிக்கவைத்தால்,

கமலஹாஸ்யக் கதைசொல்லி காதலேற்றுகிறாய்
சகலகலா வல்லவனே.!

No comments:

Post a Comment