இந்த முன்னூற்றி அறுபத்தைந்து நாட்களாய்,
நீ தான் என்னுள் முற்றிலும் நிறைந்திருக்கிறாய்
காதலா..!
நீ ஏன் என்னை காதலிக்கவேண்டும்.?
நான் ஏன் உன்னை காதலிக்கவேண்டும்.?
காரணம் அறிவாயா காதலா.?
முன்பொரு ஜென்மத்தில்,
தம்பதியராய் கூடிவாழ்ந்த நாம்.
உனக்கு முன் நான் இறந்தும்,
பிறிதொரு நாளில் நீ இறந்தும்,
உன் தாய் வயிற்றில் நீயும்,
என் தாய் வயிற்றில் நானும்.
எனக்கு முன் நீயும்,
உனக்குப்பின் நானும்,
பிறந்திருக்கிறோம்.!
அன்று நீ என்னை அழைத்தது தேவகணம்,
சிலுவையிலிருந்து என்னை உயிர்ப்பித்து,
உள்ளங்கையில் அறையப்பட்ட
ஆணிகளை உருவி
மயூரத்தின் வண்ணப்பீலியால் தடவிய
உனது வார்த்தைகள் வரம்.!
யாரும் கேளாத என் புலம்பலுக்கு
செவிமடுத்தவன் நீ.!
எனது கவிதைகளை இசையமத்தவன் நீ.!
சுடுமணல் கடந்த இச்சிறு பாதங்களுக்கு,
முத்தஒத்தடம் உனது அன்பு.!
ப்ரியங்கூர் காதலா..
நீ.,
மீட்பன் - தேவகுமாரன்.!
நான்.,
சம்மனசுகளின் இராக்கினி.!
நாம்..
புதிதாய் பிறந்த குழந்தைகளின் தூய நிர்வாணம்..!
வாழ்வதெற்கென்றே துணிந்திருக்கிறோம்.
மண்ணாயினும் சரி.
விண்ணானாலும் சரி..!
உன்க்கு என் அன்பு.
No comments:
Post a Comment