😝
என்னிடம் காதல் சொல்ல உனக்கு
இருபத்தெட்டு வருடம் தேவைப்பட்டிருக்கிறது.!?
நான் மட்டும் நீயாய் இருந்தால்,
பேசத்துவங்கும் போதே சொல்லியிருப்பேன்..!
#நீ வேஸ்ட்டு டா...
😉
ஆரம்பத்தில்,
"ஹே லவ் யூ சொல்லுடா லூஸு.."
என்று ஏடாகூடமாகக் கத்திவிடுவேன் எனப் பயந்துதான்
உன் கண்களைத் தவிர்த்துவந்தேன்..!
😬
ஒரு குறுஞ்செய்தியில் சொல்லி இருக்கலாம்,
ஒரு கடிதத்தில் கவிதையாய்ச் சொல்லி இருக்கலாம்,
ஒரு தோழியிடம் சொல்லச்சொல்லி அனுப்பியிருக்கலாம்..
ஆனால்,
கட்டிப்பிடித்துத்தேம்பியழ உன் தோள் கிடைத்திருக்காதே..!
😡
கோபம் வந்த போது
"மூஞ்சப் பாரு, போடா..."
என்று திட்டிவிட்டேன்.
என் மூஞ்சைப் பார்த்து.
"என் மூஞ்சிக்கு என்ன கொறச்சல்" - என்கிறான்.
இப்போது
அவன் மூஞ்சைப் பார்த்துச்
சிரிக்கத்தான் தோணுகிறது..!
😍
முடிந்தது வெட்கப்புத்தாண்டு என்றும்,
வருவது முத்தப்பொங்கல் என்றும்,
கிள்ளிச் சிரிக்கிறான்..
....ச்சீ போடா
நினைத்துப்பார்க்கவே
வெட்கமாய் இருக்கிறது..!!
😋
நீ அருகாமையில் இருக்கும்போதும்
உன்னை அலைபேசியில் அழைப்பது,
உன் ரிங்டோன் கேட்டு ரசிக்கத்தான்..
""மலரே நின்னே கானதிருன்னால்
மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே..!!"
😘
முத்தம் கொடுத்துப்
பிரியாத சந்திப்பைச்
சந்திப்பாக ஏற்றுக்கொள்வதில்லை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
No comments:
Post a Comment