Wednesday, June 8, 2016

❤ஹே சண்டக்காரா❤





சரசரவென உள்நுழைந்து
யாரேனும் இருக்கிறார்களா என
எட்டிப்பார்த்து..

முத்தமிட்டுச் செல்கையில்
பூனை ஒன்று "மியாவ்" என்கிறது..!

இனி பூனையிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.!

"யார்கிட்டயும் சொல்லிடாத ப்ளீஸ்"





முதன் முதலாய் உன் பெயரெழுதிய பேனா

இன்றுவரை உன் பெயர் மட்டுமே

எழுதிக்கொண்டிருக்கிறது.!





தோழியர் முன் பரிகசிப்பாய்
கிள்ளிப் பார்த்து கனவா  என்பாய்
உதட்டைச்சுழித்து சிரிப்பாய்
புருவம் சுருக்கி முறைப்பாய்
கண்கள்  விரிய பரிசளிப்பாய்
சணடையிடுவாய்
சமாதானம் செய்வாய்..

உன்னுடைய பாவனைகளை ஒன்றாய்ச் சேர்த்து

இன்றைய கனவு காணுகிறேன்.!





முன்னறிவிப்பின்றி  பெய்கிற மழையை போல,

உன் நினைவுகள் வரும்போதெல்லாம்

காய வைத்த துணி எடுக்கச் செல்வதாகக் கூறி

மொட்டை மாடி சென்றுவிடுகிறேன்..!




சமாதானத்திற்குப் பிறகும்

உம்ம்.. என்று முகத்தை வைத்திருப்பான்..

கைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் நாய்க்குட்டி போல,

மனசு உடல் விட்டு துள்ளித் தவிக்கும்

சட்டையைப் பிடித்து

"லவ் யூ சொல்லுடா.. "

என சண்டைபிடிப்பேன்.

சொன்னபின் தான்

உண்மையாக சமாதானமாவான்..!




நான் பெரியவளா நீ பெரியவனா

எனக் கேள்வி எழும்போதெல்லாம்

நானே பெரியவள் என்பேன்..!

பார்த்தாயா..

ஸ்மார்ட் போனின் பாஸ்வேர்டாய் உனை மாற்றி,

கைகளுக்குள் வைத்திருக்கிறேன்.!!




சோகமாய் முகத்தைவைத்துக் கொண்டு

இனி எங்கூட பேச மாட்டியா எனும்போது.,

.........

இறுக்கம் தளர்த்தி

சிரிக்க ஆரம்பித்துவிடுவேன்..!!
❤❤❤❤❤❤❤❤❤❤

No comments:

Post a Comment