❤
சரசரவென உள்நுழைந்து
யாரேனும் இருக்கிறார்களா என
எட்டிப்பார்த்து..
முத்தமிட்டுச் செல்கையில்
பூனை ஒன்று "மியாவ்" என்கிறது..!
இனி பூனையிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.!
"யார்கிட்டயும் சொல்லிடாத ப்ளீஸ்"
❤
முதன் முதலாய் உன் பெயரெழுதிய பேனா
இன்றுவரை உன் பெயர் மட்டுமே
எழுதிக்கொண்டிருக்கிறது.!
❤
தோழியர் முன் பரிகசிப்பாய்
கிள்ளிப் பார்த்து கனவா என்பாய்
உதட்டைச்சுழித்து சிரிப்பாய்
புருவம் சுருக்கி முறைப்பாய்
கண்கள் விரிய பரிசளிப்பாய்
சணடையிடுவாய்
சமாதானம் செய்வாய்..
உன்னுடைய பாவனைகளை ஒன்றாய்ச் சேர்த்து
இன்றைய கனவு காணுகிறேன்.!
❤
முன்னறிவிப்பின்றி பெய்கிற மழையை போல,
உன் நினைவுகள் வரும்போதெல்லாம்
காய வைத்த துணி எடுக்கச் செல்வதாகக் கூறி
மொட்டை மாடி சென்றுவிடுகிறேன்..!
❤
சமாதானத்திற்குப் பிறகும்
உம்ம்.. என்று முகத்தை வைத்திருப்பான்..
கைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் நாய்க்குட்டி போல,
மனசு உடல் விட்டு துள்ளித் தவிக்கும்
சட்டையைப் பிடித்து
"லவ் யூ சொல்லுடா.. "
என சண்டைபிடிப்பேன்.
சொன்னபின் தான்
உண்மையாக சமாதானமாவான்..!
❤
நான் பெரியவளா நீ பெரியவனா
எனக் கேள்வி எழும்போதெல்லாம்
நானே பெரியவள் என்பேன்..!
பார்த்தாயா..
ஸ்மார்ட் போனின் பாஸ்வேர்டாய் உனை மாற்றி,
கைகளுக்குள் வைத்திருக்கிறேன்.!!
❤
சோகமாய் முகத்தைவைத்துக் கொண்டு
இனி எங்கூட பேச மாட்டியா எனும்போது.,
.........
இறுக்கம் தளர்த்தி
சிரிக்க ஆரம்பித்துவிடுவேன்..!!
❤❤❤❤❤❤❤❤❤❤
No comments:
Post a Comment