Wednesday, June 8, 2016

❤ நினைவோ ஒரு பறவை ❤




கைகளற்றவன் தோள்பட்டையால்
கண்ணீரைத் துடைப்பது போல,

அவ்வளவு இயல்பாய்
அனிச்சையாய் வந்துவிடுகிறது,
உன்னைப் பற்றிய கவிதைகள்.!




எப்படியடா நினைவுகளின்
சுமை தாங்கி நிமிர்ந்து நடக்கிறாய்.?

நான் அங்கங்கு மோதி
தடுக்கித் தடுக்கி விழுகிறேன்..!




அஞ்சு நிமிஷம் கழிச்சு பேசுறேன் என
அழைப்பை துண்டிக்கும் போதெல்லாம்,

ஒவ்வொரு நிமிடத்திற்கும்
ஒவ்வொரு மணிநேரம் காத்திருக்கிறேன்.!




அழுதபடி முத்தம் கொடுத்த அந்த இரவில்
மழை பொழிந்தது.!

இருள்கவிழ்ந்த இரவில் நம் குழந்தைக்கு,
நிலா என்றுப் பெயர் வைத்தோம்.!




நீண்ட பயணங்களில்
தூங்கும் உன்னைத்
தோளில் தாங்கி
விழித்திருக்கவேண்டும்.!




மெதுவாகப் பேசு

விழித்துக் கொண்டிருக்கிறது இரவு.!




உதட்டிற்கும் தேனீர்க் குவளைக்கும்
உள்ள நெருக்கத்தில்
காதல் சுரக்கிறது.

பருகக் கூடுகிறது தேனீர்-பிரியம்.!




உனது தேர்வுகளில் உருப்படியானது
நான் மட்டுந்தான்எனும் போது,
இருவர் கண்ணிலும் பெருமிதம்.!

No comments:

Post a Comment