¿?
ஒரு எல்நினோவிற்கு பின்னான விடியலில்,
நம்மை சூழ்ந்திருக்கிறதொரு வனம்.
பூக்களில்லா வனம்
பறவை இல்லா வனம்
வனத்தின் ஒரு தொங்கலில் நானிருக்கிறேன்.
மறுதுருவத்தில் நீ இருக்கிறாய்.
எனது கூப்பாடுகளை மரம் தின்று,
இலை கிரகித்து, ஒரு காயாகிறது.
உனது கூச்சல்களை செரித்து,
ஒரு கனியாகக்கூடும்!
வாளையுருவி வழிசெய்து
வனம் கடக்கிறேன்.
நீயும் கற்களையுரசி தீயுண்டாக்கி,
வனமழித்து, துருவித்துளாவி
சலித்துப்போய் திரும்பிக் கொண்டிருப்பாய்.
காடென்னை கைவிட்டுவிட்டதாகப் புலம்பிக்கொண்டிருப்பாய்..
நான் அவையங்களை பிய்த்துருட்டி,
காடெங்கும் கற்களாய் பரப்பி காத்திருக்கிறேன்
ஒரு அகலிகையாய்..!
No comments:
Post a Comment