Wednesday, June 8, 2016

மிழிவேகிய நிறமெல்லாம்








போடி எனும் போது,
என்னிடமிருந்து மொத்த உரிமையையும்
நீ எடுத்துக் கொள்கிறாய்.!



உன் கண்ணைத் தவிர
எந்தவொரு கண்ணாடியும்
என்னை அழகாய்க் காட்டியதில்லை.!



உன் கைகளைப் பிடித்தபடி
சாலையைக் கடக்கவேண்டும்
குருடானாலும் சந்தோஷம்.!



முகமெங்கும் முள்பூத்த
ரோஜாப்பூ கன்னம்.❤



பார்த்தாயா.?
பார்த்தாயா.?.
உன்னையும் என்னையும் சுற்றியே,
இந்த சூரியன் சுற்றுவதைப் பார்த்தாயா...??




வாடா போடா கூடாது
இனி மரியாதை கொடுத்து தான்
அழைக்கனும் என்றான்.

சரிங்க புருஷர் என்றேன்.

வெடுக்கெனத் திரும்பிக் கொண்டான்.

திரும்பி நின்று சிரித்துக் கொண்டிருப்பான்...

எனக்குத் தெரியும்.....❤

No comments:

Post a Comment