❤
போடி எனும் போது,
என்னிடமிருந்து மொத்த உரிமையையும்
நீ எடுத்துக் கொள்கிறாய்.!
❤
உன் கண்ணைத் தவிர
எந்தவொரு கண்ணாடியும்
என்னை அழகாய்க் காட்டியதில்லை.!
❤
உன் கைகளைப் பிடித்தபடி
சாலையைக் கடக்கவேண்டும்
குருடானாலும் சந்தோஷம்.!
❤
முகமெங்கும் முள்பூத்த
ரோஜாப்பூ கன்னம்.❤
❤
பார்த்தாயா.?
பார்த்தாயா.?.
உன்னையும் என்னையும் சுற்றியே,
இந்த சூரியன் சுற்றுவதைப் பார்த்தாயா...??
❤
வாடா போடா கூடாது
இனி மரியாதை கொடுத்து தான்
அழைக்கனும் என்றான்.
சரிங்க புருஷர் என்றேன்.
வெடுக்கெனத் திரும்பிக் கொண்டான்.
திரும்பி நின்று சிரித்துக் கொண்டிருப்பான்...
எனக்குத் தெரியும்.....❤
No comments:
Post a Comment