Wednesday, June 8, 2016

❤ நாட்குறிப்பு ❤




சீப்பைத் தலையில் வைத்துக்கொண்டே,

வீடெல்லாம் தேடிய நாளில்,

முதன்முதலில் நான் உணர்ந்தேன்

உன் மீதான காதலை.!




பஸ்ஸில் நெரிசல் அதிகம் என்று
பைக்கில் அழைத்துச் செல்வான்..

எனக்குத் தெரியாதா.,

பஸ்ஸில் நெரிசல் அதிகம் என்றும்,
பைக்கில் நெருக்கம் அதிகம் என்றும்.!




டைரிக் குறிப்புகளில்
முத்தங்களைத் தவிர
வேறெதுவும் இருப்பதில்லை..!




நீ அழகாகவும் இருக்கவேண்டாம்
அன்பாகவும் இருக்கவேண்டாம்.

அப்படியே இரு,

அன்பாகவும், அழகாகவும்
நான் மாற்றிக்கொள்கிறேன்.!




நீ இன்னும் எத்தனை நேரம் தான்
என் கண்களையே பார்த்துக் கொண்டிருப்பாய்.,

நான் இன்னும் எத்தனை நேரம் தான்
உன் காலணிகளையே பார்த்துக்கொண்டிருக்க..!?




திட்டும்போதாவது புன்னகைக்காதே,

கோபத்தை விடுத்து, கொஞ்ச ஆரம்பித்து விடுகிறேன்..!




உள்ளங்கை மருதாணி காயும் முன்னே,
ஊட்டிவிடச் சொல்லிடணும்.!

No comments:

Post a Comment