❤
சீப்பைத் தலையில் வைத்துக்கொண்டே,
வீடெல்லாம் தேடிய நாளில்,
முதன்முதலில் நான் உணர்ந்தேன்
உன் மீதான காதலை.!
❤
பஸ்ஸில் நெரிசல் அதிகம் என்று
பைக்கில் அழைத்துச் செல்வான்..
எனக்குத் தெரியாதா.,
பஸ்ஸில் நெரிசல் அதிகம் என்றும்,
பைக்கில் நெருக்கம் அதிகம் என்றும்.!
❤
டைரிக் குறிப்புகளில்
முத்தங்களைத் தவிர
வேறெதுவும் இருப்பதில்லை..!
❤
நீ அழகாகவும் இருக்கவேண்டாம்
அன்பாகவும் இருக்கவேண்டாம்.
அப்படியே இரு,
அன்பாகவும், அழகாகவும்
நான் மாற்றிக்கொள்கிறேன்.!
❤
நீ இன்னும் எத்தனை நேரம் தான்
என் கண்களையே பார்த்துக் கொண்டிருப்பாய்.,
நான் இன்னும் எத்தனை நேரம் தான்
உன் காலணிகளையே பார்த்துக்கொண்டிருக்க..!?
❤
திட்டும்போதாவது புன்னகைக்காதே,
கோபத்தை விடுத்து, கொஞ்ச ஆரம்பித்து விடுகிறேன்..!
❤
உள்ளங்கை மருதாணி காயும் முன்னே,
ஊட்டிவிடச் சொல்லிடணும்.!
No comments:
Post a Comment