❤
காதலின் கருகொண்டு
எழுதிய இக்கவிதைகளை
தலைச்சன் பிள்ளை என்பேன் நான்..!
❤
நிழலில் கூட அழகாய்த் தெரிகிறாய்..
ச்சே...
நான் நிலமாகாது போனேனே...!
❤
மீசை என்னும் தலைப்பு வைத்த
இரண்டு வரிக் கவிதை
உன் உதடு.!
❤
உயிர் மாற்று அறுவைச்சிகிச்சை
உண்டென்றால்
உனக்கெனத் தானம் செய்வேன் என்னுயிரை.!
❤
கன்னத்தில் நீயிட்ட
உஷ்ண முத்தமொன்று.
ஆவியாகிறது கவலையின்
கண்ணீர்த் துளி.!
❤
ஏன் பேசல..? என கோபப்படுவதும்..
நா கோவத்துல இருக்கேன்..ன்னு பேசாதிருப்பதும்..
கபட நாடக வேஷதாரியடா நீ.!
❤
வீட்டுல ஆள் இருக்காங்க
பேசமுடியாது என்றதற்கு
பேச வேணாம்..
மூச்சு மட்டுமாவது விடு என்கிறான் லூஸு.!!
❤
ஜன சந்தடியான வீதிகளில்
இதழ்களால் தரவேண்டிய முத்தத்தை
விழிகளால் தந்துவிட்டுப் போகிறான்..!
No comments:
Post a Comment