Wednesday, June 8, 2016

❤ ஃப்ளையிங் கிஸ் ❤






காதலின் கருகொண்டு
எழுதிய இக்கவிதைகளை
தலைச்சன் பிள்ளை என்பேன் நான்..!




நிழலில் கூட அழகாய்த் தெரிகிறாய்..

ச்சே...

நான் நிலமாகாது போனேனே...!




மீசை என்னும் தலைப்பு வைத்த
இரண்டு வரிக் கவிதை
உன் உதடு.!




உயிர் மாற்று அறுவைச்சிகிச்சை
உண்டென்றால்
உனக்கெனத் தானம் செய்வேன் என்னுயிரை.!




கன்னத்தில் நீயிட்ட
உஷ்ண முத்தமொன்று.

ஆவியாகிறது கவலையின்
கண்ணீர்த் துளி.!




ஏன் பேசல..? என கோபப்படுவதும்..

நா கோவத்துல இருக்கேன்..ன்னு பேசாதிருப்பதும்..

கபட நாடக வேஷதாரியடா நீ.!




வீட்டுல ஆள் இருக்காங்க
பேசமுடியாது என்றதற்கு
பேச வேணாம்..
மூச்சு மட்டுமாவது விடு என்கிறான் லூஸு.!!




ஜன சந்தடியான வீதிகளில்
இதழ்களால் தரவேண்டிய முத்தத்தை
விழிகளால் தந்துவிட்டுப் போகிறான்..!

No comments:

Post a Comment