Monday, June 13, 2016

🌝 நிசி அகவல் 🌝



🌝
இரவுதூங்க விழித்திருப்போம்.

🌝
நூலகத்தின் அமைதிகாக்கிறாய்.
புத்தகமாய்ப் புரட்டு.

🌝
பகலென்பது போலிப்பூச்சு,

இமைகளை அடை.

இருண்மை என்பது இரவு.

🌝
தூக்கம் மை கலைக்கவா தூங்கிப் போவது.?

🌝
கொணர்ந்து போ.

இல்லை.

கூடுபாய்.

இனி எனக்குத் தேவையில்லை
இறப்பைப் போலொரு தூக்கம்.

🌝
இடிக்குங் கேளீர் யாருமில்லை.
கொன்னூரும் தூங்கியாச்சு.
யாமம் தேய நள்ளெனும் சேவல்.
நித்திரைவிடுத்து, இப்புறம் வா.!

No comments:

Post a Comment