🌝
இரவுதூங்க விழித்திருப்போம்.
🌝
நூலகத்தின் அமைதிகாக்கிறாய்.
புத்தகமாய்ப் புரட்டு.
🌝
பகலென்பது போலிப்பூச்சு,
இமைகளை அடை.
இருண்மை என்பது இரவு.
🌝
தூக்கம் மை கலைக்கவா தூங்கிப் போவது.?
🌝
கொணர்ந்து போ.
இல்லை.
கூடுபாய்.
இனி எனக்குத் தேவையில்லை
இறப்பைப் போலொரு தூக்கம்.
🌝
இடிக்குங் கேளீர் யாருமில்லை.
கொன்னூரும் தூங்கியாச்சு.
யாமம் தேய நள்ளெனும் சேவல்.
நித்திரைவிடுத்து, இப்புறம் வா.!
No comments:
Post a Comment