Wednesday, June 8, 2016

கந்தர்வன்







அப்பாவின் ஃப்ரஷ்ஷில் பல்துலக்கிவிட்டேன்.

அப்படிக் கெடுத்துவைத்திருக்கிறாய் என்னை...!



தினமொரு கவிதை

நீயின்றி சாத்தியமில்லை.!



பேசிச்சிரித்து,

பேசிய சொற்களை தனியே பேசி,

சிரித்ததை நினைத்துச் சிரித்து..

தீர்ந்து போச்சி இந்த இரவு.!



முழுச்சவரம் செய்த நாளில்

மீசைஇருந்தால் தான் ஆணுக்கு அழகு

என்று தத்துவம் பேசினேன்.

காரணம் காதில் சொன்னாய்.

ஒருவாரத் தூக்கம் போச்சா..



நாம் எல்லையோடு பழகுகிறோம்,

நம் எல்லையின் வரைவு நீட்டிப்புகளை

நானே வரையறுக்கிறேன்.!😉



சிரித்துச் சிரித்து அழ வைக்கும் உனக்கு

அன்பிலன் என்று பெயர்.

அழும்போது சிரிக்கவைக்கும் உனக்கு

மிருதுனன் என்று பெயர்.



கன்னத்தைக் கிள்ளி அனாயாசமாய்க் கடந்து போய்விட்டான்..!

நிலைகொள்ளாதுத் தவிக்குது மனசு.❤❤



உன்னை நான் கந்தர்வன் என்றே
நம்பிக்கொண்டிருக்கிறேன்,

நீயோ மனிதர்களைப்போல
வரவுக்கும் செலவுக்கும்
புலம்பிக்கொண்டிருக்கிறாய்...!

❤❤❤❤❤❤❤❤

No comments:

Post a Comment