❤
அப்பாவின் ஃப்ரஷ்ஷில் பல்துலக்கிவிட்டேன்.
அப்படிக் கெடுத்துவைத்திருக்கிறாய் என்னை...!
❤
தினமொரு கவிதை
நீயின்றி சாத்தியமில்லை.!
❤
பேசிச்சிரித்து,
பேசிய சொற்களை தனியே பேசி,
சிரித்ததை நினைத்துச் சிரித்து..
தீர்ந்து போச்சி இந்த இரவு.!
❤
முழுச்சவரம் செய்த நாளில்
மீசைஇருந்தால் தான் ஆணுக்கு அழகு
என்று தத்துவம் பேசினேன்.
காரணம் காதில் சொன்னாய்.
ஒருவாரத் தூக்கம் போச்சா..
❤
நாம் எல்லையோடு பழகுகிறோம்,
நம் எல்லையின் வரைவு நீட்டிப்புகளை
நானே வரையறுக்கிறேன்.!😉
❤
சிரித்துச் சிரித்து அழ வைக்கும் உனக்கு
அன்பிலன் என்று பெயர்.
அழும்போது சிரிக்கவைக்கும் உனக்கு
மிருதுனன் என்று பெயர்.
❤
கன்னத்தைக் கிள்ளி அனாயாசமாய்க் கடந்து போய்விட்டான்..!
நிலைகொள்ளாதுத் தவிக்குது மனசு.❤❤
❤
உன்னை நான் கந்தர்வன் என்றே
நம்பிக்கொண்டிருக்கிறேன்,
நீயோ மனிதர்களைப்போல
வரவுக்கும் செலவுக்கும்
புலம்பிக்கொண்டிருக்கிறாய்...!
❤❤❤❤❤❤❤❤
No comments:
Post a Comment