😍
"உன் முகத்தைப் பார்த்தால்,
திட்டக்கூடத் தோணலை"-என்றால்,
திரும்பி நின்று "இப்போ திட்டு"-என்கிறான்.
திரும்பி நின்று சிரிக்கத்தான் தோன்றுகிறது.!
😍
கோபம் முற்றி
"போடா..
உனக்கு அசிங்கமான
பொண்ணுதான் கிடைப்பா.,"
என செல்லச் சாபமிட்டால்.,
"உன்ன விட அசிங்கமான பொண்ணுக்கு
நா எங்க போறது.?" என்று
மீண்டும் கோபமேற்றுகிறான்.!
😍
இரண்டு விரல் நீட்டி
ஒன்றைத் தொடு
எனும் போதெல்லாம்,
தொடும் விரலில்
வைத்திருக்கிறாய்
ஆச்சரியங்களை.!
😍
எந்த நாயகியும்
சொல்லாதவிதத்தில்,
எந்த காட்சியிலும்
வராத இடத்தில்,
எந்த ஒளிச்சுருளும்
பதியாத சூழலில்
உன்னிடம் சொல்லவேண்டும்
என் காதலை.!
😍
காதல் சொல்லிய
நாட்களிலிருந்து கணக்கிட்டால்,
ஒன்றரை வயதுக் குழந்தை நீ.!
😍
பனிபடர்ந்த சிமெண்ட் தரையில்
காலடியாய்த் தொடருகிறாய்.!
😍
நீ உடுத்திய சட்டையில்
வியர்வையாய்ப் பூத்திருக்கிறேன்.!
😍
நீ புரண்டு படுக்கும் போதெல்லாம்,
உருண்டு விழுகிறது என் இதயம்.! ❤
No comments:
Post a Comment