Thursday, June 9, 2016

🔘 களிப்பாடல் 🔘



🔘

எதை செய்யாதே என கண்டித்தாலும்,
அதையே செய்கிறாய்.
ஒரு சேட்டைக்காரக் குழந்தையைப்போல,

சரி,

சுற்றுமுற்றும் யாருமில்லை.
கொஞ்ச நேரம் சும்மாயிரு.!

🔘

ஈரமாக்கி உலரவைக்கிறாய்.

கன்னத்தை இதழால்.

இதழை கன்னத்தால்.

🔘

சந்தேகத் தீமூட்டி
சீதையை எரித்த
ராமனல்லவே நீ.

அலைமகளை இடம் அமர்த்தி
மீராவைக் காக்கவைத்து,

யதுகுலக் கன்னியரை
மாயத்தால் மோகித்து,
மோகத்தால் மூர்ச்சையாக்கும்
ஆநிரை மேய்க்கும் கண்ணனல்ல நீ.

நீ செங்காட்டுச் சுடலை

நான் வனப் பேச்சி

செம்மண் புழுதிதோயக்
களி செய்வோம் வா.!.

No comments:

Post a Comment