Wednesday, June 8, 2016

வலைபாயுதே கண்ணா.. ❤






இராமனாகலாம் பிற்பாடு
கண்ணனாகடா இப்போது.!




இதழைத் திறந்து இதழை மூடி,
குழலென வாசிக்கிறான் இதழை.!



துப்பட்டாவின் நுனியைத் திரியாக்கி
காதிற்குள் நுழைத்தால்
கோபப்படுகின்றாய்...

என்ன பாடுபடுத்தி இருப்பாய் கோபியரை...?




நெருக்கிப் பிடித்து,
இறுக்கி அணைத்து,
இடுப்பை வளைத்து,
வில்லென உடைக்கிறாய்..!

இராமா... இராமா...

நீ கிருஷ்ணன் என்பதை
மறந்துகொண்டிருக்கிறாய்.!




ஐம்பதுகிலோவிற்கும் குறைவான
என்னைத் தூக்கிநடக்க இத்தனை சிரமப்படுகிறாயே,

கோவர்த்தனத்தை எப்படித் தூக்கினாய்...?



நீ கிருஷ்ணாயில்.!
நான் பாமாயில்.!




உன் ப்ரொஃபைல் பிக்சர் ரசிப்பதற்கும்.

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் பார்ப்பதற்கும்

தினம் தினம் வலைபாய்கிறேன்...!...கண்ணா

No comments:

Post a Comment