Wednesday, June 8, 2016

❤ களி ❤






நான் நனைய
நீ குளிக்கவேண்டும்.!




என் பத்துவிரல்களுக்குள்
உன் பத்துவிரல்கள்.

பார்த்தாயா.

பத்துப் பொருத்தம்
பொருந்தி இருந்த
அதி உன்னத ஜாதகத்தை...!




உத்தரவின்றி உள்ளே வா
என் கனவில்.,

அழைப்பு மணியடித்து
எழுப்பிவிடாதே என் துயிலை.!




நீ ஆறுதல் சொல்லுவதற்கென்றே,
அழுதுதொலைக்க வேண்டும்.!




முதல் முத்தம் ஞாபகம் இருக்கிறதா..?

எச்சில் மிட்டாயோடு
இதழ் தின்னத்தந்தது.?

அதெல்லாம் உனக்கு
நினைவிலிருக்காது..

அப்போது நீ சிறுவன்..!




நானே கவி

நீயே களி

நானே சிலை

நீயே மலை

நானே இசை

நீயே இறை.!

No comments:

Post a Comment