❤
நான் நனைய
நீ குளிக்கவேண்டும்.!
❤
என் பத்துவிரல்களுக்குள்
உன் பத்துவிரல்கள்.
பார்த்தாயா.
பத்துப் பொருத்தம்
பொருந்தி இருந்த
அதி உன்னத ஜாதகத்தை...!
❤
உத்தரவின்றி உள்ளே வா
என் கனவில்.,
அழைப்பு மணியடித்து
எழுப்பிவிடாதே என் துயிலை.!
❤
நீ ஆறுதல் சொல்லுவதற்கென்றே,
அழுதுதொலைக்க வேண்டும்.!
❤
முதல் முத்தம் ஞாபகம் இருக்கிறதா..?
எச்சில் மிட்டாயோடு
இதழ் தின்னத்தந்தது.?
அதெல்லாம் உனக்கு
நினைவிலிருக்காது..
அப்போது நீ சிறுவன்..!
❤
நானே கவி
நீயே களி
நானே சிலை
நீயே மலை
நானே இசை
நீயே இறை.!
No comments:
Post a Comment