Thursday, June 9, 2016

☔ மறைவாய் சொன்ன கதைகள். ☔




பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது.

ஒரு குடையில் ஒதுங்கி நிற்கிறோம்.

தேவதை மழை பெய்வதாக கூறுகிறாய்...

றெக்கைகள் முளைக்கிறது என் விலாப்புறம்....!!


விட்டு விட்டுப்பெய்கிறது
விடாது பெய்கிறது
விடியல் வரை பெய்கிறது
மழை போல் உன் நினைவு..!


உனக்கும் எனக்குமான
ஒற்றை முகவரி இட்ட கடிதத்தை
ஊரெல்லாம் அஞ்சல் செய்கிறது

இந்த மழை...!


இந்த மழை நாள்
பின்வாசல் தாழ்வாரத்தில்
நாய்க்குட்டி போல்
சோம்பிக்கிடக்கிறது,

இன்னுமிருக்கிறது

முன் பனியும்
பின் பனியும்...  😜😜😜


வெதுவெதுப்பான
தேனீர் கோப்பையை
உள்ளங்கையில் வைத்து
சூடேற்றிக்கொண்டிருக்கிறேன்...

சரி..,

நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்..??


வள்ளுவன் சொன்ன
ஊடல் உவகையயும்

குறுந்தொகையின் தலைவிகூற்றையும்

பாரதியின் கண்ணன் பாட்டையும்

கதையாய் சொல்கிறது

மறைவாய் இந்த மழை..!

☔☔☔☔☔☔☔☔☔☔☔

No comments:

Post a Comment