Thursday, June 9, 2016

❤ இவன் மேகரூபன் ❤


❤❤❤
ஏங்க என்று அழைக்க

ஏங்கிப் போயிருக்கிறேன்.!



உன் கண்களில்தான் போதை என்றேன்,

என் இதழ்களில்தான் போதை என்றாய்,

மதுவிலக்கைத் தடைசெய்யவேண்டும்

தமிழ்நாட்டில்.!



நீ கவியானால்

நான் கவிதை.

நான் கவியானால்

நீ கவிதைத் தொகுப்பு.!




என் நிழல் உன்மேல் விழுவது

சூரிய கிரகணம்.

உன் நிழல் என்மேல் விழுவது

சந்திரகிரகணம்.




திருடியபோது சிக்காமல்

திரும்ப வைக்கும்போது சிக்கிக்கொண்டான்

முத்தத்திருடன்.!



கையை வைத்துக்கொண்டு சும்மா இரு

எனும்போதெல்லாம்,

உன்னை வைத்துக்கொண்டு சும்மாஇருப்பதெப்படி.?

என்பதையே பதிலாய்த் தருகின்றான்.!



புள்ளிக் கோலம் போடுகையில்

கிள்ளிக் கோலம் போடுகிறான்.!



நாணம் கொண்டு எதை எதையோமறைத்தாலும்

காட்டிக்கொடுத்துவிடும் இந்தக்கண்களைத்தான்

மறைக்க முடிவதில்லை..



களவு கற்பித்து

திருடியென்று பட்டம்சூட்டுகிறான்

திருடன்.!



தோழியர் மத்தியில்
ஸ்ரீ ராமன் என்று அறிமுகப் படுத்துகிறேன்

துச்சாதனனை.!



நீயின்றி எனை நனைத்த மழைநாளில்,
நானுணர்ந்தேன்

நீ மேகரூபன்.!!

❤❤❤❤❤❤❤❤❤

No comments:

Post a Comment