❤❤❤
ஏங்க என்று அழைக்க
ஏங்கிப் போயிருக்கிறேன்.!
❤
உன் கண்களில்தான் போதை என்றேன்,
என் இதழ்களில்தான் போதை என்றாய்,
மதுவிலக்கைத் தடைசெய்யவேண்டும்
தமிழ்நாட்டில்.!
❤
நீ கவியானால்
நான் கவிதை.
நான் கவியானால்
நீ கவிதைத் தொகுப்பு.!
❤
என் நிழல் உன்மேல் விழுவது
சூரிய கிரகணம்.
உன் நிழல் என்மேல் விழுவது
சந்திரகிரகணம்.
❤
திருடியபோது சிக்காமல்
திரும்ப வைக்கும்போது சிக்கிக்கொண்டான்
முத்தத்திருடன்.!
❤
கையை வைத்துக்கொண்டு சும்மா இரு
எனும்போதெல்லாம்,
உன்னை வைத்துக்கொண்டு சும்மாஇருப்பதெப்படி.?
என்பதையே பதிலாய்த் தருகின்றான்.!
❤
புள்ளிக் கோலம் போடுகையில்
கிள்ளிக் கோலம் போடுகிறான்.!
❤
நாணம் கொண்டு எதை எதையோமறைத்தாலும்
காட்டிக்கொடுத்துவிடும் இந்தக்கண்களைத்தான்
மறைக்க முடிவதில்லை..
❤
களவு கற்பித்து
திருடியென்று பட்டம்சூட்டுகிறான்
திருடன்.!
❤
தோழியர் மத்தியில்
ஸ்ரீ ராமன் என்று அறிமுகப் படுத்துகிறேன்
துச்சாதனனை.!
❤
நீயின்றி எனை நனைத்த மழைநாளில்,
நானுணர்ந்தேன்
நீ மேகரூபன்.!!
❤❤❤❤❤❤❤❤❤
No comments:
Post a Comment