🍭🍭🍭🍭🍭
உன் இனிப்பு முத்தம் வாங்கிய
அலைப்பேசியை
எறும்புகள் மொய்க்கிறது
என்னவரே...!!!!!
🍭🍭🍭🍭🍭
நீ அளந்த பொய்களை எல்லாம்
அடுக்கிவைத்திருக்கிறேன்
ரசிக்க கொஞ்சம் சிரிக்க கொஞ்சம்.!
🍭🍭🍭🍭🍭
நா செத்துட்டா என்ன செய்வ?
என்று அபத்தமாய் கேட்டு சிரிக்கிறான்...
"உன்ன கொன்னதுக்காக ஜெயில்ல இருப்பேன்"
என்று சொன்னேன்..!!
இனி எதுனா கேப்ப...
🍭🍭🍭🍭🍭
முத்தம் கொடுக்குறாப்ல
உதட்ட குவிச்சிட்டு,
செல்ல குட்டி
கன்னு குட்டி
என்று கொஞ்சியவனை
பன்னி குட்டி என்று கொஞ்சினேன்....
மூஞ்ச பாக்கணுமே,
பன்னிக்குட்டியாட்டம்... 🐷
🍭🍭🍭🍭🍭
சரி, இனி உங்கிட்ட பொய்யே சொல்லமாட்டேன் என்று
பொய்சத்தியம் செய்கிறான்..
தல வெடிச்சு செத்துட்டா;
முண்டத்துக்கா தாலிகட்டுவ
முண்டம்...!
🍭🍭🍭🍭🍭
வெய்யிலை கோபமென்றும்
மழையை கொஞ்சலென்றும் கொண்டால்..,
வெய்யில் நாளில் பெய்யும் கள்ள மழை நம் காதல்.. ❤
🍭🍭🍭🍭🍭
No comments:
Post a Comment