Monday, June 13, 2016

"பின் தொடரும் நிழலில் குரல்" 1




😈
என் சாயலொத்த

என் பெயர்கொண்ட

என் வயதுடைய

ஒருத்தியின் மரணத்திலிருந்து,

ஒருத்தியாகவே உணர்கிறேன்

என்னை.!

தன்னிறக்கம் கொண்டு

இயலாமையின் துக்கம் தாளமல்

மலையுச்சியிலிருந்து குதித்து இறந்ததாகவும்,

தேற்றஆளற்று சொக்கப்பனைமரமாய்

மொட்டை வெளியில்

நின்றுகொண்டு எரிந்ததாகவும்,

பார்த்தவர்கள் சொல்லிக்கொண்டர்கள்.

முயல்குட்டி போன்ற அவள் வெதுவெதுப்பான கன்னங்களை

கைகளில் ஏந்தி,

சாபமேற்று உறைந்த அவள் ஊனில்

உனது ஆசுவாசத்தை தந்திருப்பாயானால்

அவள் இறப்பைத் தடுத்திருக்கலாம்

நீ....

நான்,

எனது இயலாமையையும்,

தேற்றலற்ற தனிமையயும்

பல்லின் இடுக்கில் புதைத்துவைத்துச் சிரிக்கிறேன்.

இப்போதெல்லாம்,

அப்பாவின் ஏசல்கள் காதில் விழுவதில்லை.

அம்மாவோ இன்னொருத்தியின்

புகைப்படத்தைப் பார்த்து

புலம்பிக்கொண்டிருக்கிறாள்

இன்றிலிருந்து பதினாறாம் நாளில்,

நீயும் ஒப்புக்கொள்வாய்..

உன்னைச் சுற்றி ஒருத்தி நடமாடுவதாய்...!!

😈

No comments:

Post a Comment