🔘🔘
உன் பெயர்க்கொண்ட குழந்தைகளை
இறக்கிவிடத்தான் மனமே இல்லை
என் இடுப்பிலிருந்து.!
🔘🔘
நிகழாத தப்பில்
தவறேதும் இல்லை..
சாமிக்குத்தான் ரத்தம்
மனுஷாளுக்கு எலும்பும் கறியும்தான்.
🔘🔘
அருகில் இருந்தும்
தொலையும் என்னை
தேடித்தருகிறாய்.
மீண்டும் தொலைகிறேன்
மீட்டெடு என்னை.
🔘🔘
வெய்யிலை இலையும்
மரத்தை நிழலும் தாங்குகிறது.
மரம் தான் நான்..
நீ தான் நிழலும் வெயிலும்..
🔘🔘
நான் எழுதி நீ ரசிப்பதுதான்
கவிதைக்குள் கவிதை.!
🔘🔘
No comments:
Post a Comment