Friday, June 10, 2016

🔘🔘 கவிதைக்குள்_கவிதை 🔘🔘



🔘🔘

உன் பெயர்க்கொண்ட குழந்தைகளை

இறக்கிவிடத்தான் மனமே இல்லை

என் இடுப்பிலிருந்து.!


🔘🔘

நிகழாத தப்பில்

தவறேதும் இல்லை..

சாமிக்குத்தான் ரத்தம்

மனுஷாளுக்கு எலும்பும் கறியும்தான்.

🔘🔘

அருகில் இருந்தும்

தொலையும் என்னை

தேடித்தருகிறாய்.

மீண்டும் தொலைகிறேன்

மீட்டெடு என்னை.

🔘🔘

வெய்யிலை இலையும்

மரத்தை நிழலும் தாங்குகிறது.

மரம் தான் நான்..

நீ தான் நிழலும் வெயிலும்..


🔘🔘

நான் எழுதி நீ ரசிப்பதுதான்

கவிதைக்குள் கவிதை.!

🔘🔘

No comments:

Post a Comment